திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் சுராஜ் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வடிவேலு நடித்த ‛நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சுராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன் திரைப்படம் ஏன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த படத்தின் கதாநாயகன் தேர்வே தவறாக அமைந்தது. முதலில் நானும், தனுஷூம் அந்த கதையை பேசினோம். அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களால் தனுஷ் நடிக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஜெயம் ரவி வைத்தது என் தவறான முடிவு. அவருக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார்.