இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் சுராஜ் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால், அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வடிவேலு நடித்த ‛நாய் சேகர் ரிட்டன்ஸ்' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சுராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன் திரைப்படம் ஏன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று நினைக்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த படத்தின் கதாநாயகன் தேர்வே தவறாக அமைந்தது. முதலில் நானும், தனுஷூம் அந்த கதையை பேசினோம். அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில காரணங்களால் தனுஷ் நடிக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஜெயம் ரவி வைத்தது என் தவறான முடிவு. அவருக்கு அந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார்.